Wednesday, November 15, 2017

1. இது என்னம்மா புதுக்கதை?

'அப்பா கதைகள்' என்ற வலைப்பதிவில் அப்பாக்களை மையமாக வைத்துச் சில (கற்பனைக்) கதைகளை எழுதி இருக்கிறேன்.

அதுபோல் அம்மாக்களை மையமாக வைத்துச் சில கதைகளை இந்தப் பதிவில் எழுத எண்ணம். 

இவையும் கற்பனைக் கதைகள்தான். ஆனால் முதல் பதிவாக என் அம்மாவைப் பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு பதிவைத் தமிழில் எழுத உள்ளேன். அதற்குப் பிறகு வரும் கதைகள் எல்லாம் கற்பனைக் கதைகள்தான்.

அம்மா கடவுளின் மிக ஆச்சரியமான படைப்பு. தன் குழந்தையிடம் ஒரு அம்மாவுக்கு இருக்கும் அன்பு, அக்கறை இவற்றுக்கு ஈடு இணை கிடையாது

என் பெற்றோர்களின் அம்மாக்கள் தொடங்கி, என் அம்மா, என் குழந்தைகளின் அம்மா, என் பேத்தியின் அம்மா என்று நான்கு தலைமுறை அம்மாக்களை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். 

இவர்களைத் தவிர இன்னும் பல அம்மாக்களை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் ஒரு சில நிமிடங்களே பார்த்து வியந்த அம்மாக்களும் உண்டு.

தலைமுறை வேறுபாடுகள் அம்மாக்களிடமும் வேறுபாடுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் அம்மா என்ற உறவின் அடிப்படை குணம் மாறவில்லை. மாறவும் மாறாது.

வாருங்கள் அம்மாக்களின் உலகை எட்டிப் பார்ப்போம்.


No comments:

Post a Comment